Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஷீலாவிற்கு எதிரான விசாரணை முடிவடைந்தது
தற்போதைய செய்திகள்

ஷீலாவிற்கு எதிரான விசாரணை முடிவடைந்தது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.10-

போலீஸ்காரர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் அரச மலேசிய போலீஸ் படையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் இன்ஸ்பெக்டர் ஷீலா ஷேரோனுக்கு எதிரான விசாரணை முடிவடைந்து விட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

மேல் நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை தற்போது துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் ஓர் உணவகத்திற்கு முன்பு, ஒரு பாகிஸ்தான் ஆடவரைத் தடுத்து நிறுத்தி, விசாரணை செய்து கொண்டு இருந்த மூன்று போலீஸ்காரர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக ஷீலாவிற்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

அந்த வெளிநாட்டு ஆடவரை மடக்கிய போலீஸ்காரர்கள், அவரிடம் வாகனமோட்டும் லைசென்ஸ் இல்லை என்று கூறி, அவரை மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சி நடத்ததாகவும், அதனைத் தாம் தட்டிக் கேட்டதாகவும் ஷீலா எதிர்வினையாற்றியுள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு