Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஷீலாவிற்கு எதிரான விசாரணை முடிவடைந்தது
தற்போதைய செய்திகள்

ஷீலாவிற்கு எதிரான விசாரணை முடிவடைந்தது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.10-

போலீஸ்காரர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் அரச மலேசிய போலீஸ் படையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் இன்ஸ்பெக்டர் ஷீலா ஷேரோனுக்கு எதிரான விசாரணை முடிவடைந்து விட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.

மேல் நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை தற்போது துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் ஓர் உணவகத்திற்கு முன்பு, ஒரு பாகிஸ்தான் ஆடவரைத் தடுத்து நிறுத்தி, விசாரணை செய்து கொண்டு இருந்த மூன்று போலீஸ்காரர்களின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக ஷீலாவிற்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.

அந்த வெளிநாட்டு ஆடவரை மடக்கிய போலீஸ்காரர்கள், அவரிடம் வாகனமோட்டும் லைசென்ஸ் இல்லை என்று கூறி, அவரை மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சி நடத்ததாகவும், அதனைத் தாம் தட்டிக் கேட்டதாகவும் ஷீலா எதிர்வினையாற்றியுள்ளார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்