பினாங்கு மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பினாங்கு பெரிக்காத்தான் நேஷனல் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெற்ற பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 40 சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை செவ்வாய்க்கிழமை காலையில் பதவி உறுதி மொழி எடுத்துக்கொள்ளவிருக்கின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் இன்னமும் விவாதித்துக்கொண்டு இருப்பதாக பாஸ் கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் 40 சட்டமன்றத் தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் 11 தொகுதிகளை கைப்பற்றியது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


