பினாங்கு மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பினாங்கு பெரிக்காத்தான் நேஷனல் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெற்ற பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 40 சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை செவ்வாய்க்கிழமை காலையில் பதவி உறுதி மொழி எடுத்துக்கொள்ளவிருக்கின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் இன்னமும் விவாதித்துக்கொண்டு இருப்பதாக பாஸ் கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் 40 சட்டமன்றத் தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் 11 தொகுதிகளை கைப்பற்றியது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


