கோலாலம்பூர், ஜுலை 13-
இணைய பகடிவதை பிரச்சனைகளை திறம்பட ஒடுக்க இன்னும் ஆழமான, விரிவான சட்டம் அரச மலேசிய போலீஸ் படைக்கு தேவைப்படுகிறது.
அப்பிரச்சனைகளை கையாள வெவ்வேறு சட்டங்களை PDRM சார்ந்திருப்பதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.
எடுத்துக்காட்டாக இணைய மிரட்டல் தொடர்பான விசாரணைகளுக்கு குற்றவியல் சட்டத்தையும், இணையத்தில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஒருவரை சிறுமைப்படுத்தும் விசாரணைகளுக்கு 1998 தொடர்பு பல்லூடக சட்டம் பயன்படுத்தப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் இணைய பகடிவதையால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டு பின்னர் உயிரை மாய்த்துக் கொண்ட Esha எனும் TIKTOK INFLUENCER-ரின் மரணத்தை அடுத்து PDRM-மையும், MCMC-யையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
அது குறித்து தொடர்பு அமைச்சர் FAHMI FADZIL-லுடன் பேச்சு நடத்தப்படும் என டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.








