Jul 4, 2026
Thisaigal NewsYouTube
நளினி பத்மநாதனின் சேவைக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

நளினி பத்மநாதனின் சேவைக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.08-

கூட்டரசு நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகளில் ஒருவரான டான் ஶ்ரீ நளினி பத்மநாதனின் பணி சேவைக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி 66 வயதை எட்டும், நளினி பத்மநாபன், கட்டாய பணி ஓய்வு பெறும் நிலையில் அவரின் சேவைக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்பதல் அளித்துள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இதற்கான கடிதம் நேற்று வியாழக்கிழமை டான் ஶ்ரீ நளினி பத்மநாதனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நளினி பத்மநாதனின் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டு இருப்பது மூலம், இவ்வாண்டில் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கும் 5 ஆவது நீதிபதியாக இவர் விளங்குகிறார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில் நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்ட நளினி பத்மநாதன், பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதி, அப்பீல் நீதிமன்ற நீதிபதி , கூட்டரசு நீதிமன்ற நீதிபதி என தொடர் பதவி உயர்வின் மூலம் தொடர்ந்து நீதிப் பரிபாலனத்துறைக்குச் சேவையாற்றி வருகிறார்.

நீதிபதிகளின் கட்டாயப் பணி ஓய்வு வயது 66 ஆகும்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்