கடந்த மூன்று ஆண்டு காலமாக 16 வயதுடைய தமது வளர்ப்பு மகளை, பாலியல் பலாத்காரம் புரிந்து, பல்வேறு பாலியல் சித்ரவதைகளைச் செய்து வந்ததாக ஆடவர் ஒருவர் இன்று மலாக்கா, ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுள்ளார்.
32 வயதுடைய அந்த நபருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள 32 குற்றச்சாட்டுகளை அந்நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இரு வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபருக்கு எதிராக தண்டனை அளிப்பதற்கு முன்னதாக வழக்கின் தன்மைகளை ஆராய்வதற்கு ஏதுவாக இவ்வழக்கு விசாரணை வரும் மே 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 32 குற்றச்சாட்டுகள் அடிப்படையில் பிரம்படி தண்டனையுடன் 830 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அந்த ஆடவரின் மனைவியும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருமான 40 வயது மாது, பிராசிகியூஷன் சாட்சியாக மாறியதால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


