கடந்த மூன்று ஆண்டு காலமாக 16 வயதுடைய தமது வளர்ப்பு மகளை, பாலியல் பலாத்காரம் புரிந்து, பல்வேறு பாலியல் சித்ரவதைகளைச் செய்து வந்ததாக ஆடவர் ஒருவர் இன்று மலாக்கா, ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுள்ளார்.
32 வயதுடைய அந்த நபருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள 32 குற்றச்சாட்டுகளை அந்நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இரு வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபருக்கு எதிராக தண்டனை அளிப்பதற்கு முன்னதாக வழக்கின் தன்மைகளை ஆராய்வதற்கு ஏதுவாக இவ்வழக்கு விசாரணை வரும் மே 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 32 குற்றச்சாட்டுகள் அடிப்படையில் பிரம்படி தண்டனையுடன் 830 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அந்த ஆடவரின் மனைவியும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருமான 40 வயது மாது, பிராசிகியூஷன் சாட்சியாக மாறியதால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


