கடந்த மூன்று ஆண்டு காலமாக 16 வயதுடைய தமது வளர்ப்பு மகளை, பாலியல் பலாத்காரம் புரிந்து, பல்வேறு பாலியல் சித்ரவதைகளைச் செய்து வந்ததாக ஆடவர் ஒருவர் இன்று மலாக்கா, ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுள்ளார்.
32 வயதுடைய அந்த நபருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள 32 குற்றச்சாட்டுகளை அந்நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இரு வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபருக்கு எதிராக தண்டனை அளிப்பதற்கு முன்னதாக வழக்கின் தன்மைகளை ஆராய்வதற்கு ஏதுவாக இவ்வழக்கு விசாரணை வரும் மே 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 32 குற்றச்சாட்டுகள் அடிப்படையில் பிரம்படி தண்டனையுடன் 830 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அந்த ஆடவரின் மனைவியும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருமான 40 வயது மாது, பிராசிகியூஷன் சாட்சியாக மாறியதால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


