Apr 17, 2026
Thisaigal NewsYouTube
எதிர்கட்சித் தலைவர் பதவி காலியிடம் குறித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது
தற்போதைய செய்திகள்

எதிர்கட்சித் தலைவர் பதவி காலியிடம் குறித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது

Share:

எதிர்க்கட்சித் தலைவரான ஹம்சா ஜைனுடின் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த பதவி காலியாக இருப்பதை அறிவிக்கும் அதிகாரப்பூர்வக் கடிதமானது நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெரிகாத்தான் நேஷனல் தலைவர் அகமட் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.

இன்றோ அல்லது நாளையோ அக்கடிதமானது நாடாளுமன்றத்தில் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இன்று வெள்ளிக்கிழமை திரங்காணு மாநில பாஸ் கட்சி ஏற்பாட்டில் நடைபெற்ற ஹரி ராயா திறந்த இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகமட் சம்சூரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்பதவிக்காக பல தரப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதையும் அகமட் சம்சூரி சுட்டிக் காட்டியுள்ளார்.

அந்த விண்ணப்பங்களை தாங்கள் மதிப்பாய்வு செய்து வருவதாகவும், அவற்றின் அமைப்பு மற்றும் சமர்ப்பிப்புகளை முழுமையாகப் புரிந்துகொள்ள கூடுதல் விவரங்களையும் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, பின்னர் உயர் மட்ட தலைமைக்குழு கூட்டத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Related News

பணியாளர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு / கதிர்வீச்சு பாதுகாப்பு விதி மீறல்கள் நடந்ததாக மருத்துவமனை மீது குற்றச்சாட்டு

பணியாளர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு / கதிர்வீச்சு பாதுகாப்பு விதி மீறல்கள் நடந்ததாக மருத்துவமனை மீது குற்றச்சாட்டு

ஹோர்முஸ் தடையால் மலாக்கா நீரிணையைச் சுற்றி பதற்றம் அதிகரிப்பு

ஹோர்முஸ் தடையால் மலாக்கா நீரிணையைச் சுற்றி பதற்றம் அதிகரிப்பு

பேராவில் 22 மாதங்களில் 2 புதிய தமிழ்ப்பள்ளிகள்: டத்தோ அ. சிவநேசன் தகவல்

பேராவில் 22 மாதங்களில் 2 புதிய தமிழ்ப்பள்ளிகள்: டத்தோ அ. சிவநேசன் தகவல்

இருக்கையை சாய்ந்து ஆபத்தான முறையில் விரைவுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் - போலீஸ் விசாரணை

இருக்கையை சாய்ந்து ஆபத்தான முறையில் விரைவுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் - போலீஸ் விசாரணை

பௌத்தக் கோட்பாடுகள் மற்றும் 'மடானி' கருத்தாக்கம் குறித்த மாநாடு மே மாதம் நடைபெறுகின்றது

பௌத்தக் கோட்பாடுகள் மற்றும் 'மடானி' கருத்தாக்கம் குறித்த மாநாடு மே மாதம் நடைபெறுகின்றது

பிரிக்பீல்ட்ஸ் நகைக்கடை கொள்ளைச் சம்பவம்: 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

பிரிக்பீல்ட்ஸ் நகைக்கடை கொள்ளைச் சம்பவம்: 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு