May 28, 2026
Thisaigal NewsYouTube
வளர்ப்பு மகளின் ஆபாசப் படங்களை வைத்திருந்த தந்தைக்கு 6 மாதச் சிறை
தற்போதைய செய்திகள்

வளர்ப்பு மகளின் ஆபாசப் படங்களை வைத்திருந்த தந்தைக்கு 6 மாதச் சிறை

Share:

மூவார், மார்ச்.27-

தனது 15 வயது வளர்ப்பு மகளின் நிர்வாணப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோ படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக இதற்கு முன்பு வெறும் 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம் மட்டும விதிக்கப்பட்ட தந்தை ஒருவருக்கு, மூவார் உயர் நீதிமன்றம் இன்று 6 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.

கடந்த மார்ச் 19 ஆம் தேதி, 56 வயது நபருக்கு 6 ஆயிரம் அபராதத் தொகையை விதித்த மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அந்த நபருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை, குற்றத்தன்மையின் கடுமைக்கு ஏற்ப இல்லை என்று பிராசிகியூஷன் தரப்பு தனது மேல்முறையீட்டில் வாதிட்டது.

பிராசிகியூஷன் தரப்பின் இந்த மேல்முறையீட்டை செவிமடுத்த உயர் நீதிமன்றம் நீதிபதி மியோர் ஹாஷிமி அப்துல் ஹாமிட், அந்நபருக்கு விதிக்கப்பட்ட 6 ஆயிரம் ரிங்கிட் அபராதத் தொகையைத் திருப்பிக் கொடுக்குமாறு உத்தரவிட்டார். அதே வேளையில் அபாரதத்திற்குப் பதிலாக 6 மாத சிறைத் தண்டனையை விதித்தார்.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்