Aug 10, 2026
Thisaigal NewsYouTube
வளர்ப்பு மகளின் ஆபாசப் படங்களை வைத்திருந்த தந்தைக்கு 6 மாதச் சிறை
தற்போதைய செய்திகள்

வளர்ப்பு மகளின் ஆபாசப் படங்களை வைத்திருந்த தந்தைக்கு 6 மாதச் சிறை

Share:

மூவார், மார்ச்.27-

தனது 15 வயது வளர்ப்பு மகளின் நிர்வாணப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோ படங்களை வைத்திருந்த குற்றத்திற்காக இதற்கு முன்பு வெறும் 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம் மட்டும விதிக்கப்பட்ட தந்தை ஒருவருக்கு, மூவார் உயர் நீதிமன்றம் இன்று 6 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.

கடந்த மார்ச் 19 ஆம் தேதி, 56 வயது நபருக்கு 6 ஆயிரம் அபராதத் தொகையை விதித்த மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அந்த நபருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை, குற்றத்தன்மையின் கடுமைக்கு ஏற்ப இல்லை என்று பிராசிகியூஷன் தரப்பு தனது மேல்முறையீட்டில் வாதிட்டது.

பிராசிகியூஷன் தரப்பின் இந்த மேல்முறையீட்டை செவிமடுத்த உயர் நீதிமன்றம் நீதிபதி மியோர் ஹாஷிமி அப்துல் ஹாமிட், அந்நபருக்கு விதிக்கப்பட்ட 6 ஆயிரம் ரிங்கிட் அபராதத் தொகையைத் திருப்பிக் கொடுக்குமாறு உத்தரவிட்டார். அதே வேளையில் அபாரதத்திற்குப் பதிலாக 6 மாத சிறைத் தண்டனையை விதித்தார்.

Related News

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

கே.பி.அர்  உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

கே.பி.அர் உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்