98 நாள் மகப்பேறு விடுப்பு விதிமுறையை அமல்படுத்தாத முதலாளிகள் தொடர்பாக 44 புகார்கள் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வரை மனிதவள அமைச்சு பெற்றுள்ளது.
மொத்த புகார்களில் 28 புகார்கள் ஆதாரபூர்வமானவை என்றும் மீதமுள்ள 16 புகார்கள் ஆதாரமற்றவை என்றும் அதன் துணை அமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட் கூறினார்.
“ஆதாரமுள்ள புகார்களுக்குச் சம்பந்தப்பட்ட முதலாளிக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, சீர்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“அனைத்து வழக்குகளும் பணியாளருக்கு 98 நாள் மகப்பேறு விடுப்பு உரிமையை வழங்குவதற்கான முதலாளியின் இணக்கத்தின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மக்களவையில் 98 நாள் மகப்பேறு விடுப்பு கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம் குலசேகரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தற்போதைய செய்திகள்
மகப்பேறு 98 நாள் விடுப்பு விதியை அமல்படுத்தாத முதலாளிகள் தொடர்பாகப் புகார்கள்
Related News

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்


