2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை பினாங்கில் குடிநீர் துண்டிப்பு ஏற்படவுள்ளது. சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு நிலையம், இன்னும் சில இடங்களில் பழுதுபார்க்கும் பணிகள் அடிப்படையில் இந்த 96 மணி நேர குடிநீர் துண்டிப்பு நடைபெறவுள்ளது.
ஆயிரக்கணக்கான பினாங்கு குடியிருப்புவாசிகள் புத்தாண்டை நீரின்றி வரண்ட நிலையில் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
பொதுமக்கள் முன்னதாகவே 4 நாள் தேவையான நீர்களை சேகரித்து வைத்து கொள்ளுமாறு Penang Water Supply Corporation (PBAPP) தெரிவித்துள்ளது. இதுக்குறித்து விரைவில் அறிக்கை வெளியாக்கப்படுவதாகவும் இன்று செய்தியாளர் கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.
நான்கு நாட்கள் நீர் இல்லை என்றால் உணவு வியாபாரம் செய்பவர்களை பெரியளவில் பாதிக்கும் என்று வியாபாரிகள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.








