Jul 16, 2026
Thisaigal NewsYouTube
கட்டுமானத் தொழிலாளி 34-வது மாடியிலிருந்து விழுந்து பலி
தற்போதைய செய்திகள்

கட்டுமானத் தொழிலாளி 34-வது மாடியிலிருந்து விழுந்து பலி

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.16-

பினாங்கின் பாயான் முத்தியாரா பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தின் 34-வது மாடியிலிருந்து விழுந்து வங்காளதேசத் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். விவரம் அறிந்த பினாங்கு தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய துறையான JKKP சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணையை நடத்தியது.

மாடியில் பூச்சு வேலை மற்றும் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த போது, நிலை தடுமாறி 9-வது மாடியின் மேற்கூரையில் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாததால் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த JKKP உத்தரவிட்டுள்ளதுடன், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிச் செய்யாத ஒப்பந்ததாரர்களுக்குத் தடை நோட்டீஸையும் வழங்கியுள்ளது.

Related News