கோலாலம்பூர், ஜூலை.16-
உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, மானியமில்லாத ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே 5 காசுகள் மற்றும் 10 காசுகள் உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
நாளை முதல் அமலுக்கு வரும் இந்த புதிய மாற்றத்தின்படி, மானியமில்லா ரோன்95 ஒரு லிட்டர் 3 ரிங்கிட் 42 காசுகளாகவும், மானியமில்லா டீசல் ஒரு லிட்டர் 4 ரிங்கிட் 7 காசுகளாகவும் விற்பனை செய்யப்படும். அதேவேளையில், ரோன்97 பெட்ரோல் விலை மாற்றம் இன்றி 4 ரிங்கிட்டாகவே தொடர்கிறது.
எனினும், ‘பூடி95’ பெட்ரோல் மற்றும் ‘பூடி டீசல்’ திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானிய விலையிலான எரிபொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.








