Mar 11, 2026
Thisaigal NewsYouTube
முறைகேடு புரிந்தவரை பணிக்கு அமர்த்திக் கொண்டார் அமைச்சர் சிவகுமார்
தற்போதைய செய்திகள்

முறைகேடு புரிந்தவரை பணிக்கு அமர்த்திக் கொண்டார் அமைச்சர் சிவகுமார்

Share:

எம். குலசேகரரன் குற்றச்சாட்டு

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மின் விசாரணைக்கு ஆளாகியதைத் தொடர்ந்து மனித வள அமைச்சிலிருந்து நீக்கப்பட்ட ஐவரில் ஒருவர், 15 ஆண்டுகளுக்கு முன்பு முறைகேட்டினால் அதே பொறுப்பிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் ஆவர் என்று முன்னாள் மனித வள அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.


அந்த நபர் அரசியல் நியமனத்தின் வாயிலாக அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர் என்றும் கடந்த 2008 ஆம் ஆண்டில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தம்முடைய அலுவலகத்தில் பணி புரிந்தவர் என்றும் குலசேகரன் குறிப்பிட்டார்.

முறைகேடு புரிந்தார் என்பதற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நபர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது தம்முடைய அரசியல் செயலாளராக இருந்த மனித வள அமைச்சர் வி. சிவகுமாருக்கு, அந்த நபர் எதற்காக தமது அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்டார் என்பது நன்கு தெரியும். அப்படி நீக்கப்பட்ட நபர்தான் 15 ஆண்டுகளுக்கு பிறகு மனித வள அமைச்சர் சிவகுமாரின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நீக்கப்பட்ட நபரை எவ்வாறு மறுபடியும் சிறப்பு அதிகாரியாக நியமித்திருக்கிறீர்கள், இது தவறான செயல் என்பதை அமைச்சர் சிவகுமாரிடம் தாம் சுட்டிக்காட்டியதாகவும் ஈப்போ பாராட் எம்.பி.யான குலசேகரன் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு