பத்து பஹாட், பிப்ரவரி.28-
கார் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானதில், 10 மாத பெண் குழந்தை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர், பத்து பஹாட், துன் உசேன் ஓன் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இந்த விபத்து நிகழ்ந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார்.
காரின் டயர் திடீரென வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்திலிருந்த கான்கிரீட் தடுப்புகளில் மோதி விபத்துக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காரை ஓட்டிச் சென்ற 26 வயது தந்தை மற்றும் 41 வயது தாயார் ஆகிய இருவரும் கைகளில் காயங்களுடன் சீரான நிலையில் உள்ளனர்.
காரில் இருந்த அவர்களின் 10 மாதக் குழந்தை தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகக் போலீஸ் துறை தெரிவித்துள்ளது.








