Feb 28, 2026
Thisaigal NewsYouTube
கார் டயர் வெடித்து விபத்து: 10 மாதக் குழந்தை கவலைக்கிடம்
தற்போதைய செய்திகள்

கார் டயர் வெடித்து விபத்து: 10 மாதக் குழந்தை கவலைக்கிடம்

Share:

பத்து பஹாட், பிப்ரவரி.28-

கார் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானதில், 10 மாத பெண் குழந்தை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜோகூர், பத்து பஹாட், துன் உசேன் ஓன் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இந்த விபத்து நிகழ்ந்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் Shahrulanuar Mushaddat Abdullah Sani தெரிவித்தார்.

காரின் டயர் திடீரென வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்திலிருந்த கான்கிரீட் தடுப்புகளில் மோதி விபத்துக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காரை ஓட்டிச் சென்ற 26 வயது தந்தை மற்றும் 41 வயது தாயார் ஆகிய இருவரும் கைகளில் காயங்களுடன் சீரான நிலையில் உள்ளனர்.

காரில் இருந்த அவர்களின் 10 மாதக் குழந்தை தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகக் போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

Related News

புக்கிட் காயூ ஈத்தாம் துப்பாக்கிச் சூடு: மேலும் இருவர் கைது

புக்கிட் காயூ ஈத்தாம் துப்பாக்கிச் சூடு: மேலும் இருவர் கைது

துன் டாயிமின் மூன்று பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனர் – குடிநுழைவுத் துறை உறுதி

துன் டாயிமின் மூன்று பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனர் – குடிநுழைவுத் துறை உறுதி

பதற்றமான வான்வழிப் பகுதி: டோஹா, ஜெடா சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்கள் கோலாலம்பூருக்கே திரும்பின

பதற்றமான வான்வழிப் பகுதி: டோஹா, ஜெடா சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்கள் கோலாலம்பூருக்கே திரும்பின

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: விரிவான விசாரணைக்குப் பின் நடவடிக்கை - ஐஜிபி உறுதி

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: விரிவான விசாரணைக்குப் பின் நடவடிக்கை - ஐஜிபி உறுதி

ஈபிஎஃப் சந்தாதாரர்களுக்கு 6.15 விழுக்காடு லாப ஈவு - 79.6 பில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிப்பு

ஈபிஎஃப் சந்தாதாரர்களுக்கு 6.15 விழுக்காடு லாப ஈவு - 79.6 பில்லியன் ரிங்கிட் பகிர்ந்தளிப்பு

குண்டாங் ஏரி விபத்தில் 3 உயிர்களைக் காத்த 7 இளைஞர்களுடன் பிரதமர் நேரில் சந்திப்பு: வீர செயல்களைப் பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்

குண்டாங் ஏரி விபத்தில் 3 உயிர்களைக் காத்த 7 இளைஞர்களுடன் பிரதமர் நேரில் சந்திப்பு: வீர செயல்களைப் பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்