சுபாங், நவ.18-
கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிகரித்து வரும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களுக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 107 மோட்டார் சைக்கிள்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. 19 மோட்டர் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பூச்சோங், பத்து 14, டோல் சாவடியில் நடைபெற்ற சட்டவிரோத மோட்டர் சைக்கிள் பந்தயத்திற்கு எதிராக போலீசார் தொடங்கிய ஓப் பெர்செப்பாடு சம்சேங் ஜாலானான் எனும் சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 107 மோட்டார் சைக்கிள்கள் தடுத்து வைக்கப்பட்டன என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.








