கோலாலம்பூர், பிப்ரவரி.23-
கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் ஊராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது குறித்த சாத்தியக் கூறுகள் பற்றி மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகம் மேற்கொண்டு வரும் ஆய்வு, இந்த ஆண்டு மார்ச் இறுதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டரசு பிரதேசங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறுகையில், இந்த ஆய்வு இன்னும் நடைபெற்று வருவதாகவும், தற்போது வரை இதில் புதிய மாற்றங்கள் ஏதுமில்லை என்றும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் ஏற்கனவே பதிலளித்தது போல, இந்த ஆய்வு மார்ச் இறுதி வரை நீடிக்கும். கடந்த ஜனவரி 27-ஆம் தேதி இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஜனவரி 28-ல் கூட்டரசு பிரதேசத் துறையிடம் வழங்கப்பட்டது என்று ஹன்னா இயோ விளக்கினார்.








