பெத்தாலிங் ஜெயா, ஜன.17
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவை சந்தித்து, சில அறிவுறுத்தல் களை வழங்கப் போவதாக ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஏரன் அகோ டாகாங் அறிவித்ததைத் தொடர்ந்து அவரை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக துன் மகாதீர் அறிவித்துள்ளார்.
இந்நாட்டில் உள்ள இந்தியர்கள் தங்களின் தாய்நாட்டிற்கு விசுவாசமாக இல்லை என்றும், தங்களின் பூர்வீக நாட்டின் மீதுதான் இன்னமும் விசுவாசமாக உள்ளனர் என்று சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய கருத்தை துன் மகாதீர் வெளியிட்டு இருந்தார்.
பல்லின மக்கள் வாழ்கின்ற மலேசிய நாட்டில் ஒரு மூத்தத் தலைவர் வெளியிட்டுள்ள கருத்து, நாட்டின் ஒற்றுமையுணர்வை பாதிக்கும் என்பதால் துன் மகாதீரை சந்தித்து சில விஷயங்கள் பேசப்போவதாக அமைச்சர் ஏரன் அகோ டாகாங்தெரிவித்து இருந்தார்.
எனினும் தாம் கூறி வரும் வாதத்தை தற்காத்துப் பேசியுள்ள துன் மகாதீர், மலேசியாவில் ஏன் இன ரீதியாக கட்சி இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.








