ஜோகூர், ஜுலை 19-
ஜோகூர், பாசிர் கூடாங், தாமன் கோத்தா, ஜாலான்17- இல் போலீஸ்காரை மோதித் தள்ளி, ஓர் போலீஸ் அதிகாரியை காயப்படுத்தியதாக கூறப்படும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த மூவரும் இன்று ஜோகூர்பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக அவர்களை 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.
24 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் மிக ஆபத்தான முறையில் காரை செலுத்தி, போலீஸ் காரை மோதித்தள்ளும் அளவிற்கு செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே போலீசார் தங்களை தற்காத்துக்கொள்வதற்கு துப்பாக்கி வேட்டை கிளப்பியதுடன் அந்த மூவரையும் வளைத்துப்பிடித்தனர்.
பிடிபட்ட அந்த மூவரும் குறைந்தது பத்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.








