பினாங்கு, சுங்கை பகாப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், ஒற்றுமை அரசாங்க வேட்பாளரின் வெற்றியை உறுதிபடுத்த, அம்னோ கட்சி அதன் அனைத்து தேர்தல் பணிப்படைகளையும் முடுக்கிவிடவுள்ளது.
நேற்றிரவு மெனரா டத்தோ ஓன்-னில் நடைபெற்ற அக்கட்சியின் தலைவர் டத்தோ செரி அஹ்மத் ஜாஹித் ஹமிடி தலைமையிலான உச்சமன்ற கூட்டத்தில், அம்முடிவு எடுக்கப்பட்டதாக, அம்னோ பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ரஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.
சுங்கை பகாப் இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணியின் தேர்தல் பிரிவு இயக்குநராக டத்தோ செரி டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் கதிர், நடவடிக்கை பிரிவு இயக்குநராக, பினாங்கு அம்னோ தலைவர் டத்தோ மூசா ஷேக் ஃபட்ஜிர், வார் ரூம், தலைவராக டத்தூஸ்ரீ அஹ்மத் மஸ்லான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சுங்கை பகாப் இடைத்தேர்தலில், ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் பிகேஆர் கட்சியைச் சார்ந்த ஜோஹரி அரிஃபின் களமிறங்குகின்றார்.








