பேராக், ஜூலை 10-
பேராக், கோல கங்சார்-ரில், வடக்கு நோக்கி செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 245.1-ஆவது கிலோமீட்டரில், இன்று காலையில் நிகழ்ந்த இரு லோரிகளை உட்படுத்திய சாலை விபத்தில் லோரி ஓட்டுநரின் உதவியாளர் உயிரிழந்தார்.
அதேவேளையில், 40 வயதுடைய லோரி ஓட்டுநர் கால் முறிவுக்கு இலக்கானார்.
சம்பவத்தின் போது, 25 வயதுடைய உதவியாளர், லோரியினுள் சிக்குண்டிருந்த நிலையில்,நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களை பயன்படுத்தி அவரை வெளியே கொண்டு வந்தனர்.
ஆயினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதை, மருத்துவ அதிகாரிகள் உறுதிபடுத்தியதை அடுத்து, சடலம் மேல்கட்ட நடவடிக்கைகாக போலிசிடம் ஒப்படைக்கப்பட்டது.








