பெட்டாலிங் ஜெயா, ஜூலை 15 -
சமூக வலைத்தளங்களில் பிரபலமாக விளங்கும் ஒரு தம்பதியர் உட்பட நான்கு பேரின் 20 வங்கி கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM அதிரடியாக முடக்கியுள்ளது.
பொது மக்கள் வழங்கிய நன்கொடையை தவறாக பயன்படுத்தியது தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் அந்த நான்கு பிரபலங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
7 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி தொடர்பில் மொத்தம் 20 வங்கிக் கணக்குள் முடக்கப்பட்டுள்ளதாக SPRM வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஒரு தம்பதியர் உட்பட இந்த நால்வரும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக விளங்கி வருகின்றனர்.
சமூக வளைத் தளங்களில் தாங்கள் கொண்டுள்ள செல்வாக்கை சாதகமாக பயன்படுத்தி, இந்த நால்வரும் மக்களின் நலன் சார்ந்த பொது நோக்கத்திற்காக பணம் திரட்டப்படுவதாக பொது மக்களை நம்பவைத்துள்ளனர்.
இதன் மூலம் பொது மக்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட ஆயிரக் கணக்கான வெள்ளி பணத்தை அவர்கள் தங்களின் சொந்த உபயோகத்திற்காக முறைகேடான வழியில் பயன்படுத்தி உள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது.








