2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள கைதிகளும், அவர்களின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பத்தினரும் தற்போது மனோரீதியாக அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் என்று மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாரான் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் சொஸ்மா கைதிகள் சமூகவியல் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர் என்ற ஓர் பிரச்சார இயக்கத்தை கோலாலம்பூரில் உள்ள சிலாங்கூர் சீன அசெம்பிலி மண்டபத்தில் இன்று தொடக்கி வைக்கப்பட்ட நிகழ்வில் சுவாராம் இதனை தெரிவித்துள்ளது.
தற்போது சொஸ்மா சட்டத்தின் கீழ் நீதிமன்ற விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளர். அவர்களை சார்ந்த குடும்பத்தினரும் மிகுந்த பொருளாதார சிரமத்தை எதிர்நோக்கியிருப்பதாக இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், விடுவிக்கப்பட் வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


