"சீனாவின் சோங்கிங் நகரிலிருந்து கோலாலம்பூர் வரவிருந்த ஏர் ஏசியா எக்ஸ் விமானத்தில், பெண் பயணி ஒருவர் செய்த ரகளையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை, D7 809 ரக விமானம் ஓடுதளத்தை நோக்கிச் சென்றபோது, தனது நண்பர்கள் மூவர் விமானத்தில் ஏறாதது குறித்து அந்தப் பெண் பயணி, ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பணியாளர்கள் ஆங்கிலத்தில் பேசியதை ஏற்க மறுத்த அவர், தன்னிடம் மெ ண்டரின் மொழியில் மட்டுமே பேச வேண்டும் என அடம்பிடித்ததோடு பாதுகாப்பு விதிகளை மீறி அலைபேசியைப் பயன்படுத்தினார்.
இதனால் ஓடுதளத்திலிருந்து நுழைவாயிலுக்கே திருப்பி விடப்பட்ட விமானத்திலிருந்து, பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். சக பயணிகளின் பலத்த கைதட்டலுக்கு மத்தியில் அவர் இறக்கிவிடப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் சுமார் 100 நிமிடங்கள் தாமதமாகக் கோலாலம்பூர் நோக்கிப் புறப்பட்டது."








