கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய வளாகத்தில் பிச்சை எடுத்ததாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு வெளிநாட்டு நபர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் காணப்பட்ட நபர்கள் இவர்கள்தான் என்று நம்பப்படுவதாக கே.எல்.ஐ.ஏ மாவட்ட போலீஸ் தலைவர் எம்.ரவி தெரிவித்தார். பிடிபட்டவர்கள் 28 மற்றும் 45 வயதுடையவர்கள் ஆவர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், அவர்கள் தஜிகிஸ்தான் மற்றும் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் இருவரிடமும் முறையான பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.








