Dec 2, 2025
Thisaigal NewsYouTube
என் உருவப் படத்தைத் தாங்கிய  விளம்பர பலகைகள்  இனி வேண்டாம்  பிரதமர் அன்வார் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

என் உருவப் படத்தைத் தாங்கிய விளம்பர பலகைகள் இனி வேண்டாம் பிரதமர் அன்வார் வலியுறுத்து

Share:

நாடு முழுவதும், தமது உருவப் படம் அல்லது தமது மடானி அரசாங்கத்தின் எழுத்துகளைத் தாங்கிய விளம்பரங்களை இனி காட்சிக்கு வைக்க வேண்டாம் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

இதுவரையில் பொருத்தப்பட்டுள்ள, பெரிய விளம்பரங்கள் போதுமானதாகும். வருங்காலத்தில் இது போன்ற விளம்பரங்கள் வேண்டாம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

தற்போது பொருத்தப்பட்டுள்ள விளம்பரங்கள், தம்முடைய அனுமதியும், அங்கீகாரமும் இல்லாமலேயே பொருத்தப்பட்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.

விளம்பரங்களுக்காக பணத்தை விரயமாக்க வேண்டாம் என்று ஏற்கெனவே உறுதியாக கூறிவிட்டதாகவும், பிரதமர் மாறியதற்காக பழைய நிதி ஒதுக்கீட்டிலிருந்து அந்த விளம்பரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் துறை விளக்கியதாக அன்வார் தெளிவுப்படுத்தினார்.

இன்று அலோஸ்டாரில் ஹோட்டல் ரஹியாவில் மடானி மலேசியா ஹரி ராயா திறந்த இல்ல பொது உபசரிப்பு நிகழ்விற்குத் தலைமையேற்றப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசும்போது பிரதமர் இதனை தெரிவித்தார்.

விளம்பரங்களுக்குச் செலவிடும் தொகையை, வேறு நல்ல நோக்கத்திற்குப் பயன்படுத்துமாறு தாம் உத்தரவிட்டிருப்பதாக அன்வார் விளக்கினார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்