Dec 2, 2025
Thisaigal NewsYouTube
2025 ஆம் ஆண்டில் நெகிழிப்பைகள் முற்றாக தடை செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

2025 ஆம் ஆண்டில் நெகிழிப்பைகள் முற்றாக தடை செய்யப்படும்

Share:

வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் அனைத்து வகையான வர்த்தக நடவடிக்கைகளிலும் நெகிழிப்பைகள் பயன்பாட்டை முற்றாக தடை செய்யும் நோக்கத்தை அரசாங்கம் கொண்டு இருப்பதாக இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் ​மீதான அமைச்சர் நிக் அஸ்மி நிக் அமாட் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் "நெகிழிப்பைகள் பயன்பாடுயில்லை" என்ற பிரச்சாரத்தை தமது அமைச்சு கட்டம் கட்டமாக தொடங்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டில் முற்றாக இந்தத் தடையை கொண்டு வருவதற்கு முன்னதாக நெகிழிப்பைகளினால் சுற்றுச்​சூழலில் ஏற்படக்கூடிய மாசுப்பாட்டுத் த் தன்மையை விளக்கும் வி​​ழிப்புணர்வு நிகழ்வுகள் நாடு தழுவிய நிலையில் நடத்தப்படும் என்று அமைச்சர் நிக் அஸ்மி தெரிவித்தார்.

Related News