போலீஸ்காரரை பின்னணியாக கொண்டு செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை கெடா மாநில போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். கெடா மாநில போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு போலீசார் நள்ளிரவு 12.05 மணியளவில் சுங்கைப்பட்டாணி, தாமான் செஜாத்தியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 31 வயது சந்தேகப் பேர்வழியை கைது செய்துள்ளனர். அந்த நபரிடமிருந்து 5.29கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சைடி செ ஹஸ்ஸான் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபர் பிடிபட்டது மூலம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மொத்த மதிப்பு ஒரு லட்சத்து 68 ஆயிரம் வெள்ளியாகும் என்று எசிபி சைடி குறிப்பிட்டார். விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை தடுத்துவைப்பதற்கான நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

சொத்துப் பிரகடன வழக்கு: இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான குற்றச்சாட்டு ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைப்பு

260 மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கும் கட்டாய போதைப் பொருள் பரிசோதனை: மலேசிய விமானப் போக்குவரத்து குழுமம் அதிரடி உத்தரவு

பச்சிளம் குழந்தையைக் கொலை செய்ததாக 19 வயது மாணவி மீது கொலைக் குற்றச்சாட்டு

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு


