போலீஸ்காரரை பின்னணியாக கொண்டு செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை கெடா மாநில போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். கெடா மாநில போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு போலீசார் நள்ளிரவு 12.05 மணியளவில் சுங்கைப்பட்டாணி, தாமான் செஜாத்தியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 31 வயது சந்தேகப் பேர்வழியை கைது செய்துள்ளனர். அந்த நபரிடமிருந்து 5.29கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சைடி செ ஹஸ்ஸான் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபர் பிடிபட்டது மூலம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மொத்த மதிப்பு ஒரு லட்சத்து 68 ஆயிரம் வெள்ளியாகும் என்று எசிபி சைடி குறிப்பிட்டார். விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை தடுத்துவைப்பதற்கான நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


