போலீஸ்காரரை பின்னணியாக கொண்டு செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை கெடா மாநில போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். கெடா மாநில போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு போலீசார் நள்ளிரவு 12.05 மணியளவில் சுங்கைப்பட்டாணி, தாமான் செஜாத்தியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 31 வயது சந்தேகப் பேர்வழியை கைது செய்துள்ளனர். அந்த நபரிடமிருந்து 5.29கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சைடி செ ஹஸ்ஸான் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபர் பிடிபட்டது மூலம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மொத்த மதிப்பு ஒரு லட்சத்து 68 ஆயிரம் வெள்ளியாகும் என்று எசிபி சைடி குறிப்பிட்டார். விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை தடுத்துவைப்பதற்கான நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


