Dec 3, 2025
Thisaigal NewsYouTube
2026 ஆம் ஆண்டு பட்ஜெட், சமூக பாதுகாப்பை வலுப்படுத்தும்
தற்போதைய செய்திகள்

2026 ஆம் ஆண்டு பட்ஜெட், சமூக பாதுகாப்பை வலுப்படுத்தும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.07-

வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக இருக்கும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் எதிர்காலத் தொழில்களைக் கட்டமைக்கவும் இந்த பட்ஜெட் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், வீட்டு மீள்தன்மையை மேம்படுத்துதல், மென்பொருள்கள், எரிசக்தி மாற்றம், டிஜிட்டல் மயமாக்கல், தொடக்க நிறுவனங்கள் மற்றும் எதிர்காலத் தொழில்கள் போன்ற முக்கியத் துறைகளில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்த வல்லதாக இருக்கும் என்று அமீர் ஹம்ஸா தெரிவித்துள்ளார்.

தவிர "இன்றைய அழுத்தங்களிலிருந்து வீட்டு குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாக்கவும், நாளைய வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்கவும்" 2026 ஆம் ஆண்டு பட்ஜெட் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி