ஆடவர் ஒருவரை கத்தி முனையில் மடக்கி, 50 வெள்ளியை கொள்ளையடித்த குற்றத்திற்காக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் நபர் ஒருவருக்கு ஆறு ஆண்டு சிறை மற்றும் ஒரு பிரம்படித் தண்டனையை விதித்தது.
49 வயதான எம். கிருஷ்ணமூர்த்தி என்ற அந்நபர், தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி நொரினா சைனோல் அபிடின் இத்தண்டனையை விதித்தார்.
சம்பந்தப்பட்ட நபர், கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி காலை 11.55 மணியளவில் கோலாலம்பூர், ஜின்ஜாங் எமார்டி ரயில் நிலைய மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் 43 வயது சை ஃபு சாங் என்பவரிடம் பணத்தை கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








