கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள செம்பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கடும் காயத்திற்கு ஆளாகினார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.23 மணியளவில் ஜோகூர், கோத்தா திங்கி, செடிலி ஜாலான் சுஙாய் அராவில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் நிகழ்ந்தது.
20 வயது மதிக்கத்தக்க மூவர் செய்த வாகனம் சின்னாபின்னமாகியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். கடும் காயங்களுக்கு ஆளான மேலும் இருவர் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்ததாக தீயணைப்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


