பூச்சோங், அக்டோபர்.10-
வேகக் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று நம்பப்படும் லோரி ஒன்று, டோல் சாவடியை மோதித் தள்ளிய சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமுக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.53 மணியளவில் பூச்சோங் டாமன்சாரா – பூச்சோங் நெடுஞ்சாலையில் பூச்சோங் டோல் சாவடியில் நிகழ்ந்துள்ளது.
எனினும் அதிர்ஷ்டவசமாக எந்தவோர் உயிருடற் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் லோரி ஓட்டுநர் காயமுற்றார்.








