Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

3 வயது சிறுமி மரணம், விசாரணை நடத்தப்படுகிறது

Share:

ஈப்போ, மார்ச்.03-

பேரா, தெலுக் இந்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, நிகழ்ந்த கவனக்குறைவினால் 3 வயது சிறுமி மரணமுற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் தெரிவித்தார்.

அந்த சிறுமியின் மரணம் தொடர்பில் பேரா மாநில சுகாதாரத்துறையினர் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, சளிக்காய்ச்சல் தொடர்பில் அந்த சிறுமி, பெற்றோரோல் தெலுக் இந்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்த சிறுமிக்குச் செலுத்தப்பட்ட ஊசியினால் அவர் மரணமுற்றதாக கூறப்படுகிறது. எனினும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதால் ஆருடம் எதனையும் கூற வேண்டாம் என்று பொது மக்களை சிவநேசன் கேட்டுக் கொண்டார்.

Related News

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்