May 22, 2026
Thisaigal NewsYouTube
பாறைகளுக்கு நடுவில் சிக்கிய கால்; 6 மணி நேரம் போராடிய ஆடவர்
தற்போதைய செய்திகள்

பாறைகளுக்கு நடுவில் சிக்கிய கால்; 6 மணி நேரம் போராடிய ஆடவர்

Share:

ஜெலி, ஜூலை 8-

கெளந்தன், ஜெலி. ஹுலு பாலை ஆற்றில், 31 வயதுடைய ஆடவர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, அவரது கால், எதிர்பாராவிதமாக,பாறைகளுக்கு நடுவில் சிக்கியதால், சுமார் 6 மணி நேரம் அவர் வலியுடன் போராடினார்.

கடந்த சனிக்கிழமை நண்பகல் மணி 12 அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், அவ்வாடவரின் காலை வெளியே கொண்டு வர முடியாததால், அவரது நண்பர்கள் தீயணைப்பு மீட்பு வீரர்களை உதவிக்கு அழைத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, மாலை மணி 6.40 அளவில், பாறைகளுக்கு நடுவில் சிக்கியிருந்த அவ்வாடவரின் காலை, பாதுகாப்பாக விடுவிக்க செய்தனர்.

பின்னர், அவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Related News