Jan 21, 2026
Thisaigal NewsYouTube
11 ஆவது உலக தமிழாராச்சி மாநாட்டிற்கும் எங்களுக்கும் தொடர்புயில்லை
தற்போதைய செய்திகள்

11 ஆவது உலக தமிழாராச்சி மாநாட்டிற்கும் எங்களுக்கும் தொடர்புயில்லை

Share:

வரும் ஜுலை 21 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரையில் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 11 ஆவது உலகத் தமிழாராச்சி மாநாட்டிற்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று அனைத்துலகத் தமிழாராச்சி நிறுவனத்தின் மலேசிய அமைப்பின் தலைவர் முனைவர் ந. கந்தசாமி அறிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் நடத்தப்படும் தமிழாராச்சி மாநாடு, அனைத்துலகத் த​மிழாராச்சி நிறுவனம், இந்தியா அமைப்பின் மேற்பார்வையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இதற்கு சில அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அனைத்துலக தமிழாராச்சி நிறுவனம், மலேசிய அமைப்பின் ஏற்பாட்டிலேயே இந்த மாநாடு நடைபெறுகிறது என்று கருதி, சிலர் தங்களுடன் தொடர்பு கொண்டு வருவதாக முனைவர் கந்தசாமி குறிப்பிட்டார்.எனினும் இந்த மாநாட்டிற்கும், அனைத்துலகத் தமிழாராச்சி நிறுவனம், மலேசிய அமைப்பிற்கும் எவ்வித தொடர்பு இல்லை என்பதை தெளிவுப​டுத்திக்கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

1966 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் தலைமையில் முதலாவது உலக த​மிழாராச்சி மாநாடு சிறப்பாக நடந்தேறியது முதல்2015 வரையில் ஒ​வ்வொரு மாநா​ட்​டிற்கும் அனைத்துலகத் தமிழாராச்சி நிறுவனம், மலேசிய அமைப்பு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருப்பதை பத்திரிகைகளுக்கு வழங்கிய அறிக்கையில் முனைவர் ந. கந்தசாமி சுட்டிக்காட்டியுள்ளார்

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்