Mar 27, 2026
Thisaigal NewsYouTube
தடுப்புக்காவல் மரணங்கள் / விரிவான விசாரணை தேவை
தற்போதைய செய்திகள்

தடுப்புக்காவல் மரணங்கள் / விரிவான விசாரணை தேவை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 10-

விசாரணை நடைபெற்று வரும் வேளையில் தடுப்புக்காவலில் நிகழும் விசாரணை கைதிகள் மரணங்கள் அல்லது அவர்களுக்கு ஏற்படக்கூடிய காயங்கள் குறித்து போலீஸ் துறையும், மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகம்- மும் விரிவான விசாரணையை நடத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

தடுப்புக்காவல் கைதிகளின் மரணங்கள் அல்லது அல்லது காயம் தொடர்புடைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை தவிர்க்க தேவைப்படக்கூடிய பொருத்தமான நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கும்படி டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்தினார்.

இவ்விவகாரத்தில் சுஹாகம்-முடன் இணைந்து பங்காற்றுவதற்கு போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் உறுதி அளித்து இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

விசாரணைக்கைதிகளுக்கு எதிராக போலீசாரின் கடமை என்பது விசாரணை செய்துவது மட்டுமே. தண்டனை விதிப்பது என்பது நீதிபதிகளின் பொறுப்பாகும். ஆனால், தீர்ப்பு அளிப்பதற்கு முன்னதாகவே அவர்களை தண்டித்து விடாதீர்கள் என்று டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக்கொண்டார்.

இன்று திங்கட்கிழமை சுஹாகம்- மின் 25 ஆவது நிறைவு விழா கொண்டாட்டத்தில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் தொடர்பில் சுஹாகம்- முடன் இணைந்து போலீஸ் தடுப்புக்காவல்களை தாம் பார்வையிடவிருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

இந்நிகவில் சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசலினா ஓத்மான், போலீஸ் படைத் தலைவர் ரஸாருதீன் ஹுசைன் மற்றும் சுஹாகம் தலைவர் ஹிஷாமுதீன் முஹம்மது யூனுஸ் ஆகியோர் கலந்து கொண்டர்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை