Mar 20, 2026
Thisaigal NewsYouTube
பேரா மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு முதல் மின் சிகரெட் விற்பனைக்கு இனி லைசென்ஸ் இல்லை
தற்போதைய செய்திகள்

பேரா மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு முதல் மின் சிகரெட் விற்பனைக்கு இனி லைசென்ஸ் இல்லை

Share:

ஈப்போ, அக்டோபர்.02-

பேரா மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியிருந்து வேப் எனப்படும் மின் சிகரெட் விற்பனைக்கு இனி லைசென்ஸ் வழங்கப்படாது என்று மாநில மனிதவள, தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் A. சிவநேசன் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி பேரா மாநில ஆட்சிக்குழு கூட்டத்தின் வாயிலாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிவநேசன் குறிப்பிட்டார். மத்திய அரசாங்கத்தினால் மின் சிகரெட் விற்பனை முழுமையாகத் தடை செய்யப்படும் வரை ஓர் ஆயத்த நடவடிக்கையாக அடுத்த ஆண்டு முதல் பேரா மாநிலத்தில் மின் சிகரெட் விற்பனைக்கான லைசென்ஸை ஊராட்சி மன்றங்கள் வெளியிடாது என்று சிவநேசன் குறிப்பிட்டார்.

பெர்லிஸ், கெடா, ஜோகூர், பகாங், திரெங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து ஏழாவது மாநிலமாக பேரா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மின் சிகரெட் விற்பனைக்கு லைசென்ஸ் வெளியிடாது என்று சிவநேசன் விளக்கினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து