May 6, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணைத் பாலியல் வன்கொடுமை செய்து, கொள்ளையடித்த பி-ஹெய்லிங் ஊழியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பெண்ணைத் பாலியல் வன்கொடுமை செய்து, கொள்ளையடித்த பி-ஹெய்லிங் ஊழியர் மீது குற்றச்சாட்டு

Share:

கிள்ளான், ஜனவரி.27-

கிள்ளான், ஜாலான் தாப்பாவில் இரண்டு வாரங்களுக்கு முன்பு போலீஸ் அதிகாரி போல் நடித்து, ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரிடமிருந்து கொள்ளையடித்த புகாரில் 32 வயது பி-ஹெய்லிங் ஊழியர் ஆர். சத்தியசீலன் மற்றும் அவரது நண்பர் மீது கிள்ளான் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 18-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில், வாகன நிறுத்துமிடத்தில் 37 வயது மதிக்கத்தக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அவருக்குக் காயம் ஏற்படுத்தியதாக சத்தியசீலன் மீது தனியாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 10 முதல் 30 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்த்தின் கீழ் சத்தியசீலன் குற்றஞ்சாட்டப்பட்டார்.

சத்தியசீலனும் அவரது நண்பரான 34 வயது எம். பாலராஜும் இணைந்து அதே பெண்ணின் கைப்பை மற்றும் உடைமைகளைக் கொள்ளையடித்ததாக மற்றொரு கூட்டுக்குற்றம் சாட்டப்பட்டது.

இருவரும் தங்களை போலீஸ் அதிகாரிகள் என்று பொய் கூறி, கடமையில் இருப்பது போல் நடித்து அந்தப் பெண்ணை மிரட்டியதற்காகவும் தனி வழக்குப் பதிவுச் செய்யப்பட்டது. நீதிபதி Sharifah Hascindie மற்றும் மஜிஸ்திரேட் கார்த்தியாயினி ஆகியோர் முன்னிலையில் நிறுத்தப்பட்ட இருவரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்