May 6, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்கா - ஈரான் பதற்றம்: பிரதமர் அன்வார் இப்ராஹிம்  கவலை
தற்போதைய செய்திகள்

அமெரிக்கா - ஈரான் பதற்றம்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் கவலை

Share:

கோலாலம்பூர், ஜனவரி.27-

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் மோதல் போக்கு குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தச் சூழல் ஒரு திறந்தவெளி போராக மாறினால், அது மத்திய கிழக்கு நாடுகளிலும் அதற்கு அப்பாலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இரு நாடுகளும் தங்களின் ராணுவ வலிமையைப் பெருக்கி வருவதும், ஆக்ரோஷமான பேச்சுக்களும், மிகவும் அவசியமான இந்த நேரத்தில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதற்கான வாய்ப்புகளைக் குறைத்து விட்டதாக அன்வார் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நிலையற்றதாக இருக்கும் இந்தச் சூழல், எந்த நேரத்திலும் ஒரு நேரடிப் போராக மாறக்கூடிய ஆபத்து இருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான எந்தவொரு மோதலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின்மை, பொருளாதார அதிர்ச்சிகள் மற்றும் பிற நாடுகளுக்கும் பரவக்கூடிய நீண்ட காலப் பாதிப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் எச்சரித்தார்.

எந்தவொரு வியூக நலனும் இத்தகைய மனித உயிர்ச் சேதத்திற்கும் பொருள் அழிவிற்கும் நியாயமாக இருக்க முடியாது என்றும் அன்வார் மிக அழுத்தமாகக் கூறியுள்ளார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்