Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மத்திய அரசாங்கங்கத்தின் சமிக்ஞையாகும்
தற்போதைய செய்திகள்

மத்திய அரசாங்கங்கத்தின் சமிக்ஞையாகும்

Share:

நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநிலத்தின் இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் தலைமையிலான பாஸ் கட்சி வேட்பாளர்கள் அந்த இரு தொகுதிகளையும் கைப்பற்றுவார்களேயானால் அது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கு விடுக்கப்படும் ஒரு சமிக்ஞையாக கருதப்படும் என்று ஜோகூர் மாநில பாஸ் கட்சித் தலைவர் அப்துல்லா உசேன் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் பக்காத்தான் ஹராப்பானின் அமானா கட்சிக்கு சொந்தமான அந்த இரு தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கு இப்போது முதல் கொண்டு முழு வீச்சில் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஆறு மாநிலங்களின் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் அடையப்பெற்ற சாதனைப் பதிவு, ஜோகூர் மாநில இடைத் தேர்தல்களுக்கு கொண்டு செல்லப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News