நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநிலத்தின் இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் தலைமையிலான பாஸ் கட்சி வேட்பாளர்கள் அந்த இரு தொகுதிகளையும் கைப்பற்றுவார்களேயானால் அது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கு விடுக்கப்படும் ஒரு சமிக்ஞையாக கருதப்படும் என்று ஜோகூர் மாநில பாஸ் கட்சித் தலைவர் அப்துல்லா உசேன் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் பக்காத்தான் ஹராப்பானின் அமானா கட்சிக்கு சொந்தமான அந்த இரு தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கு இப்போது முதல் கொண்டு முழு வீச்சில் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஆறு மாநிலங்களின் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் அடையப்பெற்ற சாதனைப் பதிவு, ஜோகூர் மாநில இடைத் தேர்தல்களுக்கு கொண்டு செல்லப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


