Mar 29, 2026
Thisaigal NewsYouTube
பாலிவூட் நடனக் கேளிக்கை : 10 வெளிநாட்டினர் கைது
தற்போதைய செய்திகள்

பாலிவூட் நடனக் கேளிக்கை : 10 வெளிநாட்டினர் கைது

Share:

கோலாலம்பூர், மே.17-

இன்று அதிகாலையில் கோலாலம்பூரில் வாடிக்கையாளர்களுக்குப் பாலிவுட் பாணியிலான நடன நிகழ்ச்சிகளை வழங்கிய ஒரு பொழுதுபோக்கு மையத்தில் ஓப் கெகார் எனும் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 10 சட்டவிரோதக் குடியேறிகளைக் குடிநுழைவுத் துறையினர் கைது செய்தனர்.

நள்ளிரவு 12.45 மணிக்குத் தொடங்கிய சோதனையில், நேபாளம், பங்களாதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 20 முதல் 40 வயதுடைய ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட எட்டு ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாகக் கோலாலம்பூர் குடிவரவு இயக்குநர் வான் முகமட் சௌப்பி வான் யூசோப் தெரிவித்தார்.

அந்தப் பொழுதுபோக்கு மையத்தின் நுழைவாயில் பலத்த பாதுகாப்புடன் உள்ளது. அந்த மையம், தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே திறக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Related News