ஜோகூர்பாரு, டிச. 18-
குப்பைக்கூளங்களில் தாங்கள் பொறுக்கக்கூடிய பழைய காய்கறிகள், உணவகத்தின் பயன்பாட்டுக்கு அல்ல என்று ஜோகூரில் உள்ள உணவகப் பணியாளர்கள் இன்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளனர்.
தாங்கள் உணவகத்தில் வேலை செய்த போதிலும் அவ்வாறு குப்பைக்கூளங்களிலிருந்து தாங்கள் சேரிக்கின்ற காய்கறிகள் தங்களின் அன்றாட ஜீவியத்திற்காக சொந்தமான சமைத்து உண்பதற்கு பயன்படுத்தப்படுவதாக அந்த ஊழியர்கள் விளக்கம் அளித்துள்ளனர் என்று ஜோகூர் மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் தெளிவுபடுத்தியுள்ளார்.








