கோத்தா திங்கி, ஜூன்.21-
கெடா மாநிலம், குருனில் உள்ள Hobart முகாமில், கடந்த செவ்வாய்க்கிழமை, கையெறி குண்டு வீச்சுப் பயிற்சியின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில், இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்துமாறு தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவத்திற்கான உண்மையான காரணத்தை விரைவாகக் கண்டறிவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விசாரணையின் மூலம் கிடைக்கும் தகவல்கள் மற்றும் அனுபவங்களை எதிர்காலத்தில் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்த பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், இச்சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்க, இராணுவப் பயிற்சிகளில் பாதுகாப்பு தரநிலைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனிடையே, விசாரணை நிறைவடையும் வரை கையெறி குண்டு தொடர்பான அனைத்து இராணுவப் பயிற்சிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் காலிட் நோர்டின் அறிவித்துள்ளார்.








