Mar 21, 2026
Thisaigal NewsYouTube
அப்படி எந்தவொரு சட்டமும் இல்லை
தற்போதைய செய்திகள்

அப்படி எந்தவொரு சட்டமும் இல்லை

Share:

ஷாஹ் அலாம், மே 18-

UiTM எனப்படும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களை சேர்க்க முடியாது என்பதற்கு எந்தவொரு சட்டமும் இல்லை என்று மலேசிய வழக்கறிஞர்களுக்கான மனித உரிமை அமைப்பான Lawyers For Liberty திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதற்கு கூட்டரசு அரசிலமைப்புச் சட்டம் 153 ஆவது பிரிவின் உள்ளடக்கத்தை அந்த மனித உரிமை அமைப்பின் இயக்குநர் ஜெய்த் மாலேக் மேற்கோள்காட்டினார்.

மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பூமிபுத்ரா மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட ஓர் உயர் கல்விக்கூடம் என்றும் / அப்பல்லைக்கழகத்தில் பூமிபுத்ரா மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்று சட்டமே இருப்பதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலேஹ். நேற்று திட்டவட்டமாக தெரிவித்து இருப்பது தொடர்பில் ஜெய்த் மாலேக் எதிர்வினையாற்றியுள்ளார்.

மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கடைசி வரையில் பூமிபுத்ரா மாணவர்களை மட்டுமே சேர்க்க முடியும் என்றும், அதில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு இடமில்லை என்றும் அந்த அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் அக்மால் சாலேஹ் உறுதியாக தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த Lawyers For Liberty அமைப்பின் இயக்குநர் ஜெய்த் மாலேக், மாரா தொழில்நுட்ப பல்லைக்கழக விவகாரம் தொடர்பில் நிறைய பேர் தவறாக வியக்கியானம் செய்து வருவதுடன், இவ்விவகாரத்தை திரித்துக் கூறி வருகின்றனர் என்று சுட்டிக்காட்டினர்.

சம்பந்தப்பட்ட தரப்பினர், தங்களின் அரசியல் நலனுக்காக தேசிய ஒருமைப்பாட்டை இரட்டடிப்புச் செய்யும் நோக்கில் அரசியலமைப்புச் சட்டத்தின் 153 ஆவது பிரிவை மேற்கோள்காட்டி அந்த பல்லைக்கழகத்தில் பூமிபுத்ரா மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்று கூறி 1970 ஆம் ஆண்டிலிருந்து ஒரு மாயையை உருவாக்கி வருகின்றனர் என்று ஜெய்த் மாலேக் விளக்கினார்.

உண்மையிலே அரசிலமைப்புச்சட்டத்தின் 153 ஆவது விதியில் அப்படி எதனையும் மேற்கோள் காட்டப்படவில்லை. ஆனால், அவ்வாறு இருப்பது போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்று ஜெய்த் மாலேக் விளக்கினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து