May 6, 2026
Thisaigal NewsYouTube
அகதிகள் பதிவு ஆவண முறை: ஜனவரி முதல் தேதி தொடங்குகிறது
தற்போதைய செய்திகள்

அகதிகள் பதிவு ஆவண முறை: ஜனவரி முதல் தேதி தொடங்குகிறது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.25-

நாட்டில் உள்ள அகதிகள், முறையாகப் பதிவு செய்யப்படுவதை உறுதிச் செய்வதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அரசாங்கம், அகதிகள் பதிவு ஆவண முறையைச் செயல்படுத்தவிருப்பதாக உள்துறை துணை அமைச்சர் ஷாம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.

தற்போது, நாட்டில் உள்ள அகதிகள் பதிவு ஆவண முறையை ஐ.நா.வின் அகதிகளுக்கான தூதரகம் நிர்வகித்து வருகிறது. அந்த முறை மாற்றப்பட வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு ஏற்ப பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் தரவு ஒழுங்கின்மையைச் சீர்செய்யும் முயற்சியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று ஷாம்சுல் அனுவார் குறிப்பிட்டார்.

நாட்டில் அகதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வெளிநாட்டினர் ஒவ்வொருவரின் பயோமெட்ரிக்ஸும் சேகரிக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்படும் என்று அவர் விளக்கினார்.

இதற்காக அகதிகளாக உறுதிச் செய்யப்பட்டு, அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு அகதிகளுக்கான அடையாள ஆவணம் வழங்கப்படும் என்று இன்று மக்களவையில் செபுத்தோ எம்.பி. திரேசா கொக் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ஷாம்சுல் அனுவார் இதனைத் தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

அகதிகள் பதிவு ஆவண முறை: ஜனவரி முதல் தேதி தொடங்குகிறது | Thisaigal News