நாட்டில் புகை மூட்டம் அதிகரித்து வரும் நிலையில், இன்று மாலை 6 மணி நிலவரப்படி, ஐந்து மாநிலங்களில் ஒன்பது பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு ஆரோக்கியமற்ற அளவை எட்டியுள்ளது.
சரவாக் மாநிலத்தின் செரியான் பகுதியில் அதிகபட்சமாக 186 பதிவாகியுள்ளது. தொடர்ந்து கூச்சிங் 176, சமரஹான் 173 என்ற அளவிலும் பதிவானது.
சிலாங்கூரில் ஜோஹான் செத்தியா 160, ஷா ஆலம் 126 மற்றும் கோலா சிலாங்கூர் 125 என்ற அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது.
கெடாவில் சுங்கை பட்டாணி 153, பேராக்கில் தைப்பிங் 115 மற்றும் பினாங்கில் மிண்டன் 106 என்ற அளவில் பதிவாகியுள்ளன.
காற்று மாசுக் குறியீடு 101 முதல் 200 வரை இருந்தால் அது ஆரோக்கியமற்ற நிலையாகக் கருதப்படுகிறது.








