சர்ச்சைக்குரிய கருத்துகளால் கவன ஈர்ப்பைப் பெற்ற கல்வியாளர் சோலேஹா யாக்கோப்பின் பணிச் சேவையை மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகமான ஐஐயுஎம் (IIUM), முடித்துக் கொண்டதாக அறிவித்துள்ளது.
அரபு மொழி விரிவுரையாளரான சோலேஹா யாக்கோப், கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி அவர், பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய எந்தப் பதவி அல்லது பட்டத்தையும் பயன்படுத்தவோ, தமக்கு அந்தப் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறவோ அனுமதியில்லை என்று அந்த மலேசிய இஸ்லாமிய அனைத்துலக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மலாய் வரலாறு மற்றும் நாகரிகம் தொடர்பாக அவர் முன்வைத்த சில கருத்துகள் முன்னர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
குறிப்பாக, கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தை ரோமானியர்கள் மலாய்க்காரர்களிடம் இருந்து கற்றுக் கொண்டதாக அவர் கூறிய காணொளி கடந்த ஆண்டு வைரலானது குறிப்பிடத்தக்கது.








