தென் தாய்லாந்தின் நராத்திவாட், பட்டாணி மற்றும் யாலா ஆகிய மூன்று மாகாணங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு மற்றும் தீவைப்புச் சம்பவங்களில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்று கிளந்தான் மாநில போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அப்பகுதிகளுக்குத் தேவையற்ற பயணங்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் யூசோப் மாமாட் கேட்டுக் கொண்டார்.
அதேவேளை, அத்தியாவசிய காரணங்களுக்காக தென் தாய்லாந்துக்கு செல்ல வேண்டியவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு, அங்குள்ள அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








