கிளந்தான், தும்பாட், குவால ஜம்பு, பெங்காலான் குவால தாட் என்ற இடத்தில் மிகப்பெரிய அளவில் பரவசமூட்டும் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தாய்லாந்த பிரஜை ஒருவரை கைது செய்தது மூலம் ஒரு லட்சத்து 32 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 1,200 கிராம் எடைகொண்ட 12 ஆயிரம் மாத்திரைகளை கைப்பற்றப்பட்டுள்ளதாக தும்பாட் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் இப்ராஹின் ஹுசெயின் தெரிவித்தார்.
சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட அந்த அந்நியப் பிரஜையை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அந்த நபர் பரவசமூட்டும் போதை மாத்திரைகள் வைத்திருப்பது தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.








