ஷா ஆலம், பெர்சியாரன் மொக்தார் தஹாரி சாலையில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்திதொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் ஒருவர், எம்.பி.வி வாகனத்தில் மோதி உயிரிழந்தார். மாலை 5.50 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் திரைப்படத்துறை ஆய்வியல் மாணவரான 21 வயதுடைய அந்த இளைஞர் ,சம்பவ இடத்திலேயே மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர். புன்சக் ஆலம் சாலையிலிருந்து வந்து கொண்டிருந்த டொயோட்டா எஸ்டிமா ரகத்திலான அந்த எம்.பி.வி வாகனம், அருகில் உள்ள எண்ணெய் நிலையத்திற்கு திரும்பிய போது, சம்பந்தப்பட்ட மாணவர் செலுத்திய ஹோண்டா ஆர்எஸ்-எக்ஸ் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பின்புறத்திலிருந்து மோதியதாக கூறப்படுகிறது என்று ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் தெரிவித்தார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு


