ஷா ஆலம், பெர்சியாரன் மொக்தார் தஹாரி சாலையில் நேற்று நிகழ்ந்த சாலை விபத்திதொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் ஒருவர், எம்.பி.வி வாகனத்தில் மோதி உயிரிழந்தார். மாலை 5.50 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் திரைப்படத்துறை ஆய்வியல் மாணவரான 21 வயதுடைய அந்த இளைஞர் ,சம்பவ இடத்திலேயே மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர். புன்சக் ஆலம் சாலையிலிருந்து வந்து கொண்டிருந்த டொயோட்டா எஸ்டிமா ரகத்திலான அந்த எம்.பி.வி வாகனம், அருகில் உள்ள எண்ணெய் நிலையத்திற்கு திரும்பிய போது, சம்பந்தப்பட்ட மாணவர் செலுத்திய ஹோண்டா ஆர்எஸ்-எக்ஸ் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பின்புறத்திலிருந்து மோதியதாக கூறப்படுகிறது என்று ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் தெரிவித்தார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


