கோலாலம்பூர்,ஜூலை 21-
திடீர் பொருள் விலை உயர்வு பிரச்சனையை சமாளிக்க, உள்நாட்டு வாணிக வாழ்க்கைச் செலவின அமைச்சின் Price Catcher செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil வலியுறுத்தியுள்ளார்.
அந்தச் செயலியின் மூலம் பொருள்களின் விலையை எளிதில் ஒப்பிட்டு பார்க்க முடியும்.
ஒருவேளை குறிப்பிட்ட பொருளின் விலை நிர்ணையிக்கப்பட்டதை காட்டிலும் அதிகமாக இருப்பதை மக்கள் கண்டறிந்தால், அது பற்றி சம்பந்தப்பட்ட மாவட்ட தகவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் பொருளின் விலை, இப்போது அதை வாங்குவதில் எதிர்நோக்கும் சிக்கல் குறித்தும் மக்கள் தகவல் துறையினரிடம் தெரிவிக்கலாம்.
அதன் வாயிலாக பொருள் விலை உயர்வு பிரச்சனையை கையாளுவதற்கான வழிகளை KPDN-உடன் இணைந்து தமதமைச்சு ஆராயும் என FAHMI குறிப்பிட்டார்.
PRICE CATCHER செயலியின் கீழ் மளிகைக்கடை மற்றும் பல்வேறு சந்தைகளில் விற்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட நானூற்று 80 பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.








