May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பூச்சோங்கில் ஆயுர்வேத வைத்தியருக்கு போலி டத்தோஶ்ரீ மற்றும் டாக்டர் பட்டமா? விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜன.22-

பூச்சோங்கில் ஆயுவேத வைத்தியர் ஒருவர், போலி டாக்டர் பட்டத்தையும், போலி டத்தோஸ்ரீ அந்தஸ்தையும் தனது பெயருக்கு முன்னாள் சூட்டிக்கொண்டு, மருத்துவ சிகிச்சையைச் செய்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் A.A. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ஆயுர்வேத வைத்தியர், சுகாதார அமைச்சு அல்லது மருத்துவம் தொடர்புடைய இதர அரசாங்க ஏஜென்சியின் சான்றிதழ் அல்லது லைசென்ஸின்றி மருத்துவம் பார்த்து வருவதாக நம்பப்படுகிறது என்று அன்பழகன் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட வைத்திருக்கு எதிராக கூறப்பட்டுள்ள புகார் அடிப்படையில் சுபாங் ஜெயா மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள், நேற்று செவ்வாய்க்கிழமை, பண்டார் பூச்சோங்கில் உள்ள அந்த ஆயுர்வேத வைத்தியரின் வர்த்தகத் தளத்தில் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த வர்த்தகத் தளம் செயல்படுவதற்கான ஊராட்சி மன்ற உரிமத்தை அந்த ஆயுர்வேத மையம் கொண்டிருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அன்பழகன் குறிப்பிட்டார்.

அந்த ஆயுர்வேத வைத்தியர் சட்டவிரோதமாக செயல்படுவதாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலி டத்தோஸ்ரீ மற்றும் டாக்டர் பட்டத்தை சூட்டிக்கொண்டுள்ள அங்கீகரிக்கப்படாத விருது மற்றும் பட்டம் தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த வைத்தியர் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அன்பழகன் குறிப்பிட்டார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்